Last Updated : 20 Jul, 2023 06:28 AM

 

Published : 20 Jul 2023 06:28 AM
Last Updated : 20 Jul 2023 06:28 AM

ப்ரீமியம்
சிவ ஆலயங்களில் ஆடப்படும் பிரதோஷத் தாண்டவம்!

திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் போன்ற சில ஆலயங்களில் மட்டுமே பாரம்பரியமாக அரையர் சேவை நடத்தப்படுவதுண்டு. திவ்வியப்பிரபந்தப் பாடல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து பக்தி ரசம் ததும்ப நடனமாடுவதே அரையர் சேவை.
எல்லா சிவ ஆலயங்களிலும் பிரதோஷ வழிபாடு மிகவும் விமரிசையாக நடக்கும். அந்த பிரதோஷ வழிபாட்டை ஒட்டி பிரதோஷ நடனத்தை பல ஆண்டுகளாக சிவ ஆலயங்களில் நிகழ்த்திவருகிறார் உடுமலை செந்தில்.

பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் ஆராதனை நடந்த பிறகு, பிரதோஷ நாயகர் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் உள்பிராகாரத்தில் வலம் வருவார். சில கோயில்களில் மூன்று சுற்றுகள் இந்தத் திருவலம் நடக்கும். சில கோயில்களில் ஐந்து சுற்றுகள், இன்னும் சில கோயில்களில் ஒரேயொரு சுற்றுடன் திருவலம் முடிந்துவிடும். அப்படிச் சுற்றிவரும்போது அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சிவபெருமான் காட்சி தருவார். அவர்கள் சார்பாக வேதம், தேவாரம், நாகசுர இசை, நடனம் ஆகியவை நடைபெறும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x