Published : 31 May 2023 06:06 AM
Last Updated : 31 May 2023 06:06 AM
செங்குன்று நாட்டை சீவகராஜன் ஆண்டுவந்தார். ஒரு நாள் அவர் கனவில் சிம்மாசனத்தைக் கண்டார். அது அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது. அதில் அவர் ஏறி அமர்ந்ததும் பறக்க ஆரம்பித்தது. வான் வீதியில் நாட்டை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
கனவு கலைந்து சட்டென்று கண்விழித்தார் மன்னர். ‘ஆஹா! என்ன அற்புதம்! இதுவே உண்மையாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!’
மறுநாள் அமைச்சர் தர்மசீலனை வரவழைத்தார் மன்னர். தான் கனவில் பார்த்ததைச் சொன்னார்.
“அமைச்சரே, அப்படி ஒரு பறக்கும் சிம்மாசனம் எனக்கு வேண்டும்.”
அதிர்ச்சி அடைந்த அமைச்சர், “மன்னா, கனவில் கண்டதை எல்லாம் நிஜமாக்குவது சாத்தியமா?” என்றார்.
“மந்திரங்கள் தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இதை உருவாக்கச் சொல்லுங்கள். பொன்னும் பொருளும் கொடுத்துவிடலாம்.”
மன்னரின் கட்டளைப்படி நாடு முழுவதும் செய்தி தெரிவிக்கப்பட்டது. நாள்கள் கடந்தன. ஒருவரும் பறக்கும் சிம்மாசனத்தை உருவாக்க முன்வரவில்லை.
“என் கனவை நிறைவேற்றும் அளவுக்கு இங்கு யாருக்குமே திறமை இல்லையா?” என்று கேட்டார் மன்னர்.
“மன்னா, இன்னும் இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள். பறக்கும் சிம்மாசனம் செய்பவரை அழைத்து வருகிறேன்” என்று அமைச்சர் சொன்னதும் மன்னர் தலையசைத்தார்.
மறுநாள் காலை மன்னரின் அரசவைக்கு முதியவர் ஒருவர் வந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment