Last Updated : 08 Apr, 2023 06:05 AM

 

Published : 08 Apr 2023 06:05 AM
Last Updated : 08 Apr 2023 06:05 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 60: இயற்கையின் அவசரச் செய்தி

புத்தரின் சீடர் ஆனந்தா ஒருமுறை மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றார். மன்னர் அங்கே இல்லை. ஆனந்தரை வரவேற்ற அரசி, அவர் கேட்ட ஐந்நூறு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்தார். மன்னர் திரும்பி வந்ததும் அதைக் கேள்விப்பட்டு, ‘ஒரு துறவி அத்தனை ஆடைகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்கிற ஐயத்துடன் புறப்பட்டு நேரே மடத்துக்குச் சென்றார்.

அங்கு நடை பெற்ற உரையாடல் இது: “நீங்கள் வாங்கிவந்த ஆடைகளை எல்லாம் என்ன செய்வீர்கள் துறவியே?”
“இங்குத் துறவிகள் கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்களுக்குத் தருவேன்.”
“பழைய ஆடைகளை என்ன செய்வீர்கள்?”
“அவற்றைப் படுக்கை விரிப்புகளாகப் பயன் படுத்துவோம்.”
“அந்தப் பழைய விரிப்புகளை?”
“தலையணை உறைகளாக மாற்றி விடுவோம்.”
“பழைய உறைகள் என்னவாகும்?”
“அவை தரை விரிப்புகளாகிவிடும்.”
“பழைய விரிப்புகள்?”
“வாசலில் மிதியடிகளாக மாறிவிடும்.”
“பழைய மிதியடிகள்?”
“தரைத் துடைக்க வைத்துக் கொள்வோம்.”
“பழைய கந்தல் துணிகள்?”
“அவற்றைக் கிழித்து சேற்றுடன் குழைத்து மடத்தின் சுவர்மீது பூசி சுவரை வலுப்படுத்துவோம்.”

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x