Published : 03 Dec 2022 06:34 AM
Last Updated : 03 Dec 2022 06:34 AM
மனித இனத்தின் படிமலர்ச்சியில் தற்போது புதிய சமூக விலங்கினம் ஒன்று உருவாகியுள்ளது. நகரங்களிலிருந்து அமைதியான காட்டுக்குள் இவ்வகை உயிரினம் கும்பலாகச் செல்கிறது. காட்டுச் சாலையில் வாகனங்களில் பயணம் செய்கையிலும், காட்டு விலங்குகளைக் காணும்போதும், ‘ஆஆஆ… ஊஊஊ…’ என்று ஊளையிட்டு ஆர்ப்பரிப்பதே அதன் அடையாளம். நட்சத்திர விடுதியின் கேளிக்கை அரங்கைப் போன்று காட்டை நினைக்கும் அரியவகை உயிரினம் இது.
இயற்கை ஒலி அளவு: மரங்களின் இலைகள் காற்றில் உரசிக்கொள்ளும் ஒலிகளும், நீரோடையின் சலசலப்பும் மட்டுமே காட்டின் இயற்கையான ஒலி அளவு. நாம் குசு குசுவெனப் பேசிக்கொள்ளும் ரகசியமும் அதே ஒலி அளவுதான். ஒலியை அளக்கும் அளவை டெசிபல் என்போம். இருபது டெசிபல்தான் காட்டின் இயற்கையான ஒலி அளவு. நம் சமூக விலங்குகள் ஒட்டுமொத்தமாக எழுப்பும் உச்சக்குரல் ஒலியோ இடியோசையின் 120 டெசிபலையும், ஆம்புலன்சின் சைரன் ஒலியான 130 டெசிபலையும் தாண்டிவிடுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment