Published : 18 Jun 2022 06:42 PM
Last Updated : 18 Jun 2022 06:42 PM
1916-ம் ஆண்டிலேயே கருந்துளை எனும் ஒன்று இருக்கலாம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். இருப்பினும், 1967-ம் ஆண்டில்தான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்கிற பெயரை உருவாக்கினார். முதல் கருந்துளை 1971இல் கண்டறியப்பட்டது என்றாலும், விண்வெளியில் ஒரு தனிக் கருந்துளை நகர்ந்து செல்வதற்கான நேரடி ஆதாரங்களை முதன்முறையாக நாசா தற்போதே வழங்கியுள்ளது.
நாசாவின் அதிநவீன விண்வெளி தொலைநோக்கியான ஹப்பிள், உள்ளீடற்ற உருத்தோற்றத்தின் (phantom) துல்லியமான அளவீடுகள் மூலம் இதைக் கண்டறிந்துள்ளது. தன்னந்தனியாக விண்வெளியில் நகர்ந்து செல்லும் இந்தக் கருந்துளை, தற்போது பூமியிலிருந்து சுமார் 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அங்கேதான் நமது விண்மீன் மண்டலத்தின் கரினா-சகிடரியஸ் ஆர்ம் (Carina-Sagittarius arm) உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment