Published : 19 May 2022 03:50 PM
Last Updated : 19 May 2022 03:50 PM
உலகம் முழுவதும் நடைபெறும் ஆள்கடத்தலில் பெண்களும் குழந்தைகளும்தாம் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்படுகிறவர்கள். வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைவிட உள்நாட்டில் மாநிலங்களுக்கு இடையே 90 சதவீதத்தினர் கடத்தப்படுகிறார்கள். வீட்டு வேலை செய்வதற்காகவும் பாலியல் தொழில் உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் கடத்தப்படுகிற பெண்களையும் குழந்தைகளையும் மீட்கும் பணியைச் செய்துவருகிறார் சுனிதா கிருஷ்ணன். சுனிதாவின் வாழ்க்கையில் நடந்த துயரம்தான் இப்படியொரு பாதையை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம்.
பள்ளிச் சிறுமிக்கு நேரக் கூடாத துயரம் அது. மழலை மாறாத வயதிலேயே வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார் சுனிதா கிருஷ்ணன். தனக்கு நேர்ந்த கொடுமையைத் தடுக்கும் வலிமை அப்போது அவருக்கு இல்லை. ஆனால், இனி எந்தவொரு குழந்தைக்கும் அப்படியான கொடுமை நேரக் கூடாது என்கிற உறுதியைத் தன் மனத்தில் ஏற்றார். போகப் பொருளாகப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ‘பிரஜ்வலா’ என்கிற அமைப்பை உருவாக்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment