Published : 28 Apr 2022 05:21 PM
Last Updated : 28 Apr 2022 05:21 PM
இறைவன் நம்மைப் பற்றி நம்முடைய துயர்களைப் பற்றி ஒரு நொடி நினைந்தாலும் போதுமே.. அந்த ஒரு நொடி கரிசனம் நம்முடைய ஆயுளுக்கும் போதுமே! அதைப் படிப்படியாக உயர்ந்த ரசனையுடன் கூடிய தமிழ் வார்த்தைகளில் பெரியசாமி தூரன் வடித்திருக்கும் பாடல்தான் `நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ' என்னும் பாடல். தமிழுக்கும் அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமை பெரியசாமி தூரன்.
பாரதியாரின் பன்முக அறிவு விசாலத்தை ஆய்வுபூர்வமாக அவரின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதியிருக்கும் தூரனின் நூல்கள், பாரதியைப் பற்றிய புதிய தரிசனத்தை நமக்கு அளிக்கக் கூடியவை. அறிவியல் கலைக் களஞ்சியத்தையும் குழந்தைகள் கலைக் களஞ்சியத்தையும் தமிழ் இலக்கிய உலகுக்கு தூரனின் கொடை என்றே சொல்லலாம். தூரனின் பாடல்களைப் பாடாமல் கர்னாடக இசை நிகழ்ச்சிகளை அந்தத் துறையில் கோலோச்சிய இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பலரும் முடித்ததில்லை என்பதே தூரனின் சாகித்ய வளமைக்கு பெரும் சான்று.
முரளிதர கோபாலா, கலியுக வரதன், தாயே திரிபுரசுந்தரி பாடல்களின் வரிசையில் போற்றத்தக்க தூரனின் இன்னொரு பாடல் `நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ'. இந்தப் பாடலுக்கு பிரபல கிளாரிநெட் கலைஞர் ஷங்கர் துக்கர் இசை அமைத்து, வித்யா வாக்ஸும் வந்தனாவும் பாடியிருக்கும் இந்தக் காணொலி, செவிக்கும் கண்களுக்கும் ஒரே சமயத்தில் இன்பத்தை அளிக்கக்கூடிய ஓர் `ஆடியோ விஷுவல் ட்ரீட்' என்றே சொல்லலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment