Published : 22 Mar 2025 06:15 AM
Last Updated : 22 Mar 2025 06:15 AM

ப்ரீமியம்
பங்குனி ஆமைகள் இறப்பு: மீனவர்கள் மட்டும்தான் காரணமா?

கோவளம் முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 1,328 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாகவும், ஆமைகள் அழிவைத் தடுக்க வனத் துறை, மீன்வளத் துறையோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பிப்ரவரி மாதம் கூறியிருந்தார். பங்குனி ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முதல் அட்டவணையில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாகும்.

கடல் சூழலியலைப் பாதுகாப்பதில் ஆமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குஞ்சு மீன்களை உணவாகக் கொள்ளும் சொறி (ஜெல்லி) மீன்களையும், பவளத்திட்டுகளில் உள்ள பாசிகளையும் பங்குனி ஆமைகள் உண்பதால், அவற்றைக் கட்டுக்குள் வைப்பதற்கும் கடல்வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியைச் சமநிலைப்படுத்துவதற்கும் இவை பெரு மளவில் உதவுகின்றன. பவளத்திட்டுகளை ஆக்கிரமிக்கும் கடற்புற்களை ஆமைகள் உண்பதால், இவை பவளத்திட்டுகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x