Published : 15 Dec 2024 06:40 AM
Last Updated : 15 Dec 2024 06:40 AM
சமூக ஊடகங்களில் தும்மல் போட்டால்கூடப் பெரிதாக அதிர்வு இருக்கக்கூடிய ஒரு தளத்தில் ஒரு பெண்ணின் (சினேகா என்று வைத்துக்கொள்வோம்) தற்கொலை கவனிக்கப்படாமலே போயிருக்கிறது. அந்தப் பெண் முகநூலில் கொடுத்த தன்னுடைய வாக்குமூலத்தை இங்கே பலரும் பார்க்கவும் இல்லை, அது குறித்து விவாதிக்கவும் இல்லை. சினேகாவின் வறண்ட கண்களுக்குள் இருந்த காயங்களின் கண்ணீரை அவர்கள் அளவிடவும் இல்லை.
சிறு வயதிலேயே பெற்றோருக்குள் ஏற்பட்ட மன பேதம் காரணமாக இருவரும் விலகிவிட, சினேகாவின் அம்மா வேறொரு திருமணம் செய்துகொண்டார். அம்மாவை மணந்துகொண்ட அந்த மாற்றுத் தகப்பன் சினேகாவிடம் சிநேகமாக இருந்ததே இல்லை. பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு சினேகா சிறுவயதிலேயே ஆளானார். அதை அம்மாவிடம் சொன்னபோதும் அவர் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, குடும்பத்துடன் ஏற்பட்ட பேதம் காரணமாக சினேகா தன் தோழியின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment