Published : 28 Nov 2024 06:06 AM
Last Updated : 28 Nov 2024 06:06 AM
வள்ளியைப் பார்க்கும்போதெல்லாம், “நீ சமையல்கட்டுக்கு உள்ள போறதும் தெரியல, வெளிய வரதும் தெரியல. எக்ஸ்பிரஸ் வேகத்துல எல்லாத்தையும் எப்படிம்மா கச்சிதமா முடிச்சிடற?” என்று கேட்பார் பரமசிவம். “இந்த ஊரு அன்ன பூரணிம்மா நீ” என்று பாராட்டுவார் சொக்கலிங்கம். “அஞ்சு பேருக்கும் சமைப்பா. அம்பது பேருக்கும் சமைப்பா. அவள் சமையல் எப்பவும் நளபாகம்” என்று பெருமையோடு பேசுவார் முத்தம்மா ஆயா.
சுப்பிரமணியைத் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு வந்த புதிதில் எல்லாப் பெண்களையும் போல வள்ளியும் தன் வீடு, தன் வாசல் என்றுதான் இருந்தார். ஆனால் ஒரு வேலை செய்து பத்து ரூபாய் சம்பாதித்தால், அதன் கடைசிச் சில்லறையைச் செலவு செய்து முடிக்கும் வரைக்கும் அடுத்த வேலைக்குப் போகும் வேகமோ விருப்பமோ கணவரிடம் இல்லை என்பதை இரண்டு மாதங்களிலேயே புரிந்துகொண்டார். அந்த அறிவு அவரைச் சுயமாகச் சம்பாதிப்பதற்கு வழி தேடவைத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment