Published : 23 Nov 2024 06:12 AM
Last Updated : 23 Nov 2024 06:12 AM
பிரபல சுற்றுலாத் தலங்கள், காடுகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகள், கோயில்கள் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இந்தக் காட்சியை நீங்கள் தவறாது காணலாம். வீசி எறியப்படும் உணவுக்குப் போட்டிபோட்டு மோதும் குரங்குகள் அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கும். இப்படிச் சீறிச்செல்லும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகின்றன. அப்படி இறந்து போன ஓர் இளம் குரங்கை அண்மையில் பார்க்க நேர்ந்தது.
அங்கே என்ன நடக்கிறது என்று சிறிது நேரம் கவனித்தோம். அவ்வளவு நேரம் குடும்பத்தோடு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குரங்கு திடீரென்று அசைவற்று இருப்பதை, மற்ற குரங்குகளால் ஏற்க முடியவில்லை. இறந்துபோன குரங்கின் கை, கால்களைப் பிடித்து இழுப்பது, வாலைப் பிடித்து இழுப்பது, தட்டி எழுப்புவது, பேன் பார்ப்பது, சில வாகனங்களைக் கோபமாகத் துரத்துவது என்று தமக்குரிய வழியில் உணர்வுகளை அவை வெளிப்படுத்தின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment