Published : 09 Nov 2024 06:14 AM
Last Updated : 09 Nov 2024 06:14 AM
வறுமை, போர்ச் சூழலில் உள்ள நாடுகளில் போலியோ பாதிப்பு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது. அக்டோபர் 24, உலக போலியோ நாளை முன்னிட்டு யுனிசெஃப் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு முடிவில், ‘2023இல் 541 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பில் 85 சதவீதம் வறுமை நிலை, போர் பாதிப்பு உள்ள 21 நாடுகளில் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.
போலியோவை எதிர்த்துப் போராடும் 21 நாடுகளில் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக மிகுந்த பின்னடைவில் உள்ளன. குறிப்பாக சூடானில், போலியோ தடுப்பூசி போடும் விகிதம் போருக்கு முன் 85 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாகச் சரிந்ததுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment