Published : 28 Oct 2024 06:15 AM
Last Updated : 28 Oct 2024 06:15 AM
சொந்த வீடு, கார், பிள்ளைகளின் மேற்படிப்பு, வெளிநாட்டு சுற்றுலா… இவைதான் இந்திய நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பட்டியல். கடந்த 30 ஆண்டுகளில் இந்த வரிசையில் மாற்றம் நிகழ்ந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும். குறிப்பாக, சொந்த வீட்டுக் கனவு முதல் இடத்திலிருந்து பின்தங்கி இருக்கலாம். வசதியான ஒரு வாடகை வீட்டில், வாழ்ந்தால்கூட போதும், குடும்பத்தோடு வெளியில் சென்றுவர ஒரு கார் இருந்தால் தேவலாம் என்ற மனநிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டுதான் உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் முதல் உலக உற்பத்தியாளர்கள் வரை இந்தியாவை, தமிழகத்தை ஒரு முக்கியச் சந்தையாகக் கருதுகின்றனர். அவர்கள் தங்கள் உற்பத்தி மையங்களையும் இங்கு தொடங்கி உள்ளனர். விலை குறைவான ரக கார்கள் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் மழை போல் பொழிந்ததே அதற்கு சரியான எடுத்துக்காட்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT