Published : 24 Oct 2024 06:16 AM
Last Updated : 24 Oct 2024 06:16 AM
தங்கக் கோடாரிக்கு ஆசைப்படாத ஏழை விறகுவெட்டிக்கு அதைப் பரிசாகக் கொடுத்த தேவதையைப் பற்றி நாட்டுப்புறக் கதையாகக் கேட்டிருப்போம். அதைப் போல், கையறு நிலையில் வாழும் எளியவர்களின் கஷ்டத்தைத் தம் தொடர் முயற்சியால் இல்லாமல் செய்துவிடும் தேவதை மனிதர்கள் நமக்கு நடுவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஆரவாரம் இல்லாமல், விளம்பர வெளிச்சம் படாமல் சேவை செய்து கொண்டிருக்கிறவர்களில் ஒருவர் கடலூர், வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் தேவி.
அது என்ன ‘ஆசிரியர் பயிற்றுநர்’ பணி? இதுவோர் அரசுப்பணி. அதில் பணியமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர்கள். இவர்கள் சிறப்புப் பயிற்றுநர்களை வட்டாரம்தோறும் ஒருங்கிணைத்துப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் பணி? மூளை முடக்குவாதம், ஆட்டிசம், இளம் பிள்ளைவாதம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள், முக்கியமாக முது கெலும்பும் கால், கை மூட்டுகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிறந்தது முதலே பேசாதவர்களாக, நடக்காதவர்களாக இருக்கும் குழந்தைகளை வீடு வீடாகச் சென்று எடுக்கப்படும் ஆய்வின் மூலம் கண்டறிந்து, வட்டார ‘பள்ளி ஆயத்தப் பயிற்சி மைய’த்துக்குப் (School Readiness Programme centers - SRPC) பெற்றோர் உதவியுடன் அழைத்து வந்து சேர்க்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment