Published : 07 Oct 2024 06:18 AM
Last Updated : 07 Oct 2024 06:18 AM

ப்ரீமியம்
பங்குச் சந்தை எப் அன்ட் ஓ வர்த்தகம்: ஆபத்தை புரிந்து கொள்ளுங்கள்..

பங்குச்சந்தையில் இரண்டு விதமான வர்த்தகங்கள் உண்டு. ஒன்று கேஷ் மார்க்கெட். இது ‘கையில காசு வாயில தோசை' என்பது போன்றது. தாங்கள் விரும்பும் நிறுவன பங்குகளை உரிய பணத்தை செலுத்தி டீமேட் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். மற்றொன்று டெரிவேட்டிவ் மார்க்கெட் (பியூச்சர்ஸ் அன்ட் ஆப்ஷன்ஸ் - எப் அன்ட் ஓ) எனப்படும். டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் குறைவான முதலீட்டில் அதிக அளவு (கேஷ் மார்க்கெட்டைவிட பலமடங்கு) வாங்கி விற்க முடியும். இதில் பியூச்சர்ஸ் என்பது பங்குகளை குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட காலத்

துக்குள் வாங்கி கொள்கிறோம் (அல்லது விற்றுக் கொள்கிறோம்) என்று ஒப்பந்தம் செய்து கொள்வதுதான். இந்த ஒப்பந்தங்களை மீற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் நேர் செய்தே ஆக வேண்டும். இதற்கு ஒப்பந்த மதிப்பில் குறைந்த அளவு பணம் செலுத்தினால் போதும். ஆப்ஷன்ஸ் என்பது, பங்குகளை வாங்கும் அல்லது விற்கும் ஒப்பந்தத்துடன் அந்த ஒப்பந்தத்தை மீறக்கூடிய ஒரு வாய்ப்பையும் உள்ளடக்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x