Published : 09 Sep 2024 06:20 AM
Last Updated : 09 Sep 2024 06:20 AM

ப்ரீமியம்
ஆகஸ்டில் சூடுபிடித்த ஐபிஓ

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அதிகம் பார்க்க முடிந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.17,047 கோடி நிதி திரட்டியுள்ளன. இது கடந்த 27 மாதங்களில் இல்லாத உச்சம் ஆகும். இந்த ஆண்டில் இதுவரையில், 56 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.65,000 கோடி நிதி திரட்டியுள்ளன. 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 20 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.15,051 நிதி திரட்டி இருந்தன.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்களிடையே நிலவியது. இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிட்டில் ஈடுபட தயக்கம் காட்டின. இந்நிலையில், ஜூன் மாதம் தேர்தல் முடிவு வெளியாகி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு புதிய பங்கு வெளியீடு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆகஸ்டில் அது உச்சம் தொட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x