Published : 16 Aug 2024 06:36 AM
Last Updated : 16 Aug 2024 06:36 AM

ப்ரீமியம்
திரைச்சொல்லி - 9: மரபை மீறிய கன்னட சினிமா

கிரீஷ் காசரவல்லி

அமெரிக்கத் திரை மேதை மார்ட்டின் ஸ்கார்செஸி (Martin scorsese), திரைப்படப் புத்துருவாக்கத் திட்டம் ஒன்றை உருவாக்கினார். கடந்த நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த உலகப் படங்களின் பிரதிகளை மீட்டெடுத்து, அவற்றை 4கே டிஜிட்டல் தர முறையில் மறு பிரதியாக்கம் செய்வதுதான் அத் திட்டம். அதன்கீழ், அந்தந்த நாடுகளின் திரைப் பண்பாட்டுத் துறைகளும் இணைந்தன. பழுது படுவதிலிருந்தும் சீர்குலைவி லிருந்தும் சிறந்த படங்களைக் காப்பாற்றும் இப்பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

இதன் பின்னணியில், இந்தியத் திரை மேதை சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ தொடங்கிப் பல முக்கிய மான படங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டி ருக்கின்றன. அவை உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டு, இந்திய சினிமாவின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றன. ஷியாம் பெனகலின் ‘மந்தன்’ படத்தைத் தொடர்ந்து, இந்தியப் பாரம்பரியத் திரைப் பட அறக்கட்டளை (Film Heritage Foundation) ‘சடங்கு’ (Gadashraddha) என்கிற கன்னடத் திரைப்படத்தை 4கே டிஜிட்டல் தர முறையில் மறு பிரதியாக்கம் செய்திருக்கிறது. இப்படம் கன்னடத் திரைப்பட இயக்குநரான கிரீஷ் காசரவல்லியின் முதல் படைப் பாக 1977இல் வெளிவந்தது. தற்போது 2024 வெனிஸ் திரைப்பட விழாவில் ‘சடங்கு’ படத்தின் 4கே பிரதி திரையிடப் படவிருப்பது கூடுதல் சிறப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x