Last Updated : 14 Jul, 2024 12:44 PM

 

Published : 14 Jul 2024 12:44 PM
Last Updated : 14 Jul 2024 12:44 PM

ப்ரீமியம்
பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 8: தணிவுடன் பூக்கும் கவிதைகள்

தமிழில் அதிகம் கவனம் பெற்ற உலகக் கவிஞர்களில் ஒருவர் எமிலி டிக்கன்சன். அன்றாடத்துக்குள் பெண் என்கிற நிலையில் அவர் அந்த அன்றாட உலகத்துக்குள் இருந்தபடி எல்லாவற்றையும் பார்த்தார். அதற்குள் நுழையும் அஃறிணைகளையும் உயர்திணைகளையும் கருத்துகளையும் குறுக்கீடு செய்தார். தமிழில் எமிலிக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியவர் உமா மகேஸ்வரி.

தமிழ்ப் புனைவுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் இவர். கதைகளும் நாவல்களும் இவரது பங்களிப்புகள். ஆனால், கவிதைகள் வழியே தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். தான் அதுவரை புழங்கிய வீட்டையே கருப்பொருளாகக் கையிலேந்தி கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவை இவரது வீட்டுக்குள் கிடக்கும் ஒரு நாய்க்குட்டியைப் போலவோ வெயில் காணாத மணிப்ளான்ட் போலவோ அல்லாமல் தங்கள் கைகளை வெளியே நீட்டிப் பார்க்கின்றன. அதுவரை தன் அம்மாவும் முன்னோர்களும் கடைப்பிடித்த விழுமியங்கள் சரிதானா எனக் குழந்தைமையுடன் கேள்வி எழுப்பிப் பார்க்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x