Last Updated : 26 Jun, 2024 07:15 AM

 

Published : 26 Jun 2024 07:15 AM
Last Updated : 26 Jun 2024 07:15 AM

ப்ரீமியம்
தேன் மிட்டாய் - 9: உங்கள் உலகில் ஆயிரம் பூதங்கள்!

‘யார், தாரோவா? அவன் ஒரு காட்டுவாசியாச்சே. எப்படியோ தப்பித்தவறி மனிதனாகப் பிறந்துவிட்டான், பாவம்!’ இப்படித்தான் என்னை அறிந்தவர்கள் சொல்வார்கள். ஆம், ஓணானாகவோ தேரையாகவோ தும்பியாகவோ நத்தையாகவோ ஒரு காட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன். என்ன செய்ய, மனிதனாகப் பிறந்துவிட்டேன். ஆனால், மனிதர்களோடு வாழ மாட்டேன் என்று முடிவு செய்து, மூட்டை முடிச்சுகளோடு என் காட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

இல்லை, உங்களோடு எனக்கு எந்தப் பகையும் இல்லை. நீங்கள் வாழும் உலகோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை என்பதுதான் உண்மை. புலி, சிறுத்தை, பாம்பு எதற்கும் பயமில்லை எனக்கு. ஆனால், உங்கள் உலகை ஒரு கணம் நினைத்தாலே என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். கரடியின் மடியில் தலை வைத்து ஒரு முழு இரவு தூங்குவாயா அல்லது ஒரு நவீன நகரத்துக்குச் சென்று ஐந்து நிமிடங்கள் இருப்பாயா என்று கேட்டால் கரடியைத் தேடி ஓடுவேன். ஏன் என்றால் உங்கள் உலகில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகப் பூதங்கள் இருக்கின்றன. நான் உங்கள் உலகைவிட்டு வெளியே வந்ததற்குக் காரணம் அந்தப் பூதம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x