Published : 14 Jun 2024 12:15 PM
Last Updated : 14 Jun 2024 12:15 PM

ப்ரீமியம்
காலம் மறக்காத காதல் காவியம்!

ஜாவர் சீதாராமன் - சிவாஜி

அது 1963ஆம் வருடம். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதற்குத் தீர்வாக ஒரு மேம்பாலம் வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அதை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. அதேபோல், இந்தி எதிர்ப்புப் போரில் இன்னுயிரை இழந்த அரங்கநாதன் நினைவாகச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும் பின்னர்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது காரில் வடபழனி, சாலிகிராமம் ஸ்டுடியோக்களுக்குப் போகும்போது கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் காத்திருக்க நேரிடும். ரயில்வே கேட் கீப்பர், சிவாஜியின் காரைப் பார்த்தவுடன் தனது கேட் கீப்பிங் அறையில் மாட்டப்பட்டிருக்கும் சுவர்க் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்து புன்முறுவல் பூப்பாராம். இதை சிவாஜியுடன் பயணித்த அவரது ஒப்பனை உதவியாளர் கவனித்து, அதைத் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமனிடம் சொல்லியிருக்கிறார். கடிகாரம் கூடத் தனது நேரம் காட்டும் கடமையில் பின் தங்கிவிடலாம்; ஆனால், நேரம் தவறாமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் அந்த நிகழ்வின் பொருள். இந்தச் சம்பவத்தைக் கேட்டு, ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற குணங்களைப் பொருத்தி வார்த்தார் அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x