Published : 27 May 2024 06:10 AM
Last Updated : 27 May 2024 06:10 AM
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்து பாரதியார், ‘திருமேனி செழித்த தமிழ்நாடு’ என குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மேனியாவும் செழித்திருக்கும் தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவுக்கு என்று தகுந்த இடமளிக்க வேண்டிய தருணம் இது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
அது தொடர்பான இணையவழி ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒருங்கிணைத்து இருந்தது. அதில் பேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சமயமூர்த்தி IAS, "குழந்தைகள், நகர்ப்புற மாணவர்கள், சுற்றுலாவாசிகள் ஆகியோருக்கு இயற்கை தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யவும், தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா தொடர்பான திட்டத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்" என்று கூறியிருந்தார். அதற்கு கைகொடுக்கும் நோக்கில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை நடத்தி வரும் வேளாண் பண்ணையின் உரிமையாளர்கள் சிலர் முன்னெடுத்த நகர்வு பாராட்டுக்குரியது ஆகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT