Published : 21 Nov 2023 06:03 AM
Last Updated : 21 Nov 2023 06:03 AM
சுவர் விளம்பரத்தை விரும்பாத வீட்டார், ‘சுவற்றில் எழுதாதீர்’ என்று எழுதி வைக்கிறார்கள்.
சுவறும் சுவரும்: ‘சுவர்’, இடையின எழுத்தில் முடிகிறது, இதனால் சுவர் விழுந்துவிடுமோ(?) என்று, ‘சுவற்றில்’ என்று வல்லெழுத்துப் போடுவது தவறு. ‘சுவரில் எழுதாதீர்’ என்றே சரியாக எழுதுவோம். பாரையும் பாறையும் கடப்பாரை, இரும்புக் கோல்-கருவி. கல்லால் ஆனது கற்பாறை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ‘கடப்பாரைக்கும் உடையாத பாறை, அதன் அடியில் முளைத்துக் கிளம்பும் சிறு செடியின் வேருக்கு நெகிழ்ந்து இடம் கொடுக்கும்’ என்று, வேறுபட்ட இவ்விரண்டு சொற்களைக் கொண்டு வாழ்க்கை முறையை விளக்குகிறார் ஔவையார். ‘பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்’ (நல்வழி 33). ‘பாறை ஓவியங்கள் காலத்தால் தொன்மையானவை’ என்கிறார் நா. அருள்முருகன், நூல் - ‘புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்’. தொல்லியல் ஆய்வுகளில் கடப்பாரையைப் பயன்படுத்துவதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT