Last Updated : 14 Nov, 2023 06:09 AM

 

Published : 14 Nov 2023 06:09 AM
Last Updated : 14 Nov 2023 06:09 AM

ப்ரீமியம்
எதிர்கால மாணவப் படைப்பாளிகள்!

இந்தியாவில் முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக, அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதற்கு ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு' ஆகிய சிறார் இதழ்களை மாதம் இருமுறை கொண்டு வருகிறது. ஆசிரியர்களின் படைப்புத் திறனை வளர்க்க ‘கனவு ஆசிரியர்' இதழையும் மாதந்தோறும் கொண்டு வருகிறது.

படைப்பு இயக்கம்: இதுவரை வந்த இதழ்களில் இருந்து, நவம்பர் மாத இதழ்கள் கொஞ்சம் வித்தியாச மானவை. நவம்பர் மாத இதழ்களில் அனைத்துப் பக்கங்களிலும் மாணவர்கள் மட்டுமே எழுதி இருக்கிறார்கள். ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு' நவம்பர் மாத இதழ்களில் ஏறக்குறைய 100 மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் அனை வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது இன்னொரு சிறப்பு. டிசம்பர் மாத இதழாக, ‘மாற்று திறனாளிகள்' சிறப்பிதழ் கொண்டு வர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர் / ஆசிரியர் படைப்புகள் இதில் இடம்பெற உள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x