Published : 28 Oct 2023 06:06 AM
Last Updated : 28 Oct 2023 06:06 AM
இன்று ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் பல நோய்களுக்கு மக்கள் ஆட்படுகின்றனர். அவற்றில் மாரடைப்புக்குப் பிறகு முதன்மையான நோயாக இருப்பது வாத நோய். இந்தியாவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் வாதநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,85,000 பேர் வாதநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 4 பேரில் ஒருவர் வாதநோயால் மரணமடைகிறார். இன்று இளைய தலைமுறையினரையும் வாத நோய் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 20 வயதுக்கு உள்பட்டவர்களில் சுமார் 50 லட்சம் பேரிடம் வாத நோய் காணப்படுகிறது.
அறிகுறிகள் என்னென்ன? - வாத நோய் பொதுவாக முதியவர் களுக்குத்தான் ஏற்படுகிறது. என்றாலும் மற்ற வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சில அறிகுறிகளை வைத்து வாத நோய் ஏற்படப் போவதையோ அல்லது வந்துள்ளதையோ அறியலாம். பார்வைக் குறைபாடு, மனநிலையில் திடீர் மாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் தொடு உணர்வில் மாற்றம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்றவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT