Published : 26 Oct 2023 06:08 AM
Last Updated : 26 Oct 2023 06:08 AM
நல்வாழ்வுக்கான அறத்தைத் திருக்குறள் மூலம் இரண்டடியில் எளிதாகச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். ‘உலகப் பொதுமறை’ எனக் கொண்டாடப்படும் திருக்குறளுக்கு ஓவிய வடிவம் தந்திருக்கிறார் ஓவியர் செளமியா இயல். வரலாற்றில் முதல் முறையாக நாள் ஒன்றுக்கு ஒரு குறள் என மொத்தம் 1,330 குறள்களுக்கு ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார்!
ஒரு நாள் ஒரு குறள்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செளமியா, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஈடுபாட்டுடன் ஓவியம் வரைந்துவரும் அவர், வெற்றிகரமாக ‘திருக்குறள்’ திட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்ட திருக்குறள் ஓவியங்களுக்குக் கிடைத்த வரவேற்பை ஒட்டி அதைப் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT