Published : 27 Dec 2022 09:42 PM
Last Updated : 27 Dec 2022 09:42 PM

2022-ல் கால்பந்து உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள்

எம்பாப்பே, ஹாலண்ட், மெஸ்ஸி, லெவோண்டஸ்கி

சென்னை: கால்பந்து உலகக் கோப்பை தொடர் நிறைவு பெற்ற கையோடு நட்பு ரீதியிலான கிளப் போட்டிகள் தொடங்கிவிட்டன. வரும் ஜனவரி முதல் கிளப் அளவிலான போட்டிகள் சூடு பிடிக்க உள்ளன. மெஸ்ஸி, பிஎஸ்ஜி கிளப் அணியுடன் வரும் ஜனவரியில் இணைவார் என சொல்லப்பட்டுள்ளது. அதே அணிக்காக விளையாடி வரும் எம்பாப்பே அந்த அணியுடன் அண்மையில் இணைந்தார்.

இந்நிலையில், 2022-ல் கால்பந்து விளையாட்டு உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம். இது கிளப் மற்றும் தங்கள் நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் வீரர்கள் பதிவு செய்த கோல்கள் என அனைத்தையும் சேர்த்தது. அதே போல உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிந்தையதானது.

2022-ல் யார் டாப்?

  • எம்பாப்பே - 55 கோல்கள்
  • எர்லிங் ஹாலண்ட் - 43 கோல்கள்
  • லெவோண்டஸ்கி - 42 கோல்கள்
  • மெஸ்ஸி - 35 கோல்கள்
  • கிறிஸ்டோபர் - 34 கோல்கள்

கத்தார் உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை பதிவு செய்து தங்கக் காலணி விருதை எம்பாப்பே வென்றார். இதே தொடரில் மெஸ்ஸி தங்கப் பந்து விருதை வென்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x