Published : 29 Jul 2022 01:00 PM
Last Updated : 29 Jul 2022 01:00 PM

செஸ் ஒலிம்பியாட் 2022: 8 வயதே ஆன ராண்டா

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த 8 வயதான ராண்டா சேடர்.

இவரது தந்தை, 5 வயதிலிருந்தே ராண்டா சேடருக்கு சதுரங்கம் கற்பிக்கத் தொடங்கினார், அதுவே விரைவில் அவளுடைய வாழ்க்கையாக மாறியது. ராண்டா 1442 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான அவர், உலகத் தரவரிசையில் 98388-வது இடம் வகிக்கிறார்.

ராண்டா சேடர் பல்வேறு தொடர்களில் பங்கேற்றுள்ளார். பாலஸ்தீனத்தில் நடைபெற்ற மகளிருக்கான சாம்பியன்ஷிப்பில் ராண்டா சேடர் 2-வது இடம் பிடித்ததை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராண்டா சேடரின் லட்சியம் மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x