Published : 08 Jun 2014 12:08 PM
Last Updated : 08 Jun 2014 12:08 PM

கம்பீர் தனது வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும் - கங்கூலி

இங்கிலாந்து தொடரில் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெற கவுதம் கம்பீர் காத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவு கங்கூலி தெரிவித்துள்ளார்.

"ஷிகர் தவான், முரளி விஜய் நன்றாக விளையாடி வருகின்றனர், ஆனால் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தட்பவெப்பமும், பிட்சும் சில வேலைகளைக் காட்டும், எனவே கம்பீருக்கு வாய்ப்பு வரும்.

கம்பீர் இந்திய அணிக்கு மீண்டும் வந்திருப்பது நல்ல விஷயம், சேவாக் ஐபிஎல் கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுக்கவில்லை, எனவே 3வது துவக்க வீரர் தெரிவிற்கு கம்பீரிடம் மீண்டும் அணித் தேர்வுக்குழு சென்றுள்ளது இதில் தவறேதும் இல்லை"

என்று கூறியுள்ளார் கங்கூலி. கவுதம் கம்பீர் கடைசியாக 2012ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை மாதம் இந்தியாவின் இங்கிலாந்து தொடர் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x