Published : 14 Nov 2019 02:55 PM
Last Updated : 14 Nov 2019 02:55 PM

ஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை

திருவனந்தபுரம்

வங்கதேசத்துக்கு எதிராக நாக்பூர் டி20 போட்டியில் எந்த நேரத்தில் ஹாட்ரிக் எடுத்தாரோ இந்திய ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், தொடர்ந்து ஹாட்ரிக் அவரை துரத்தியே வருகிறது.

3வது டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்த அவர் பிறகு 3 நாட்களில் 2வது ஹாட்ரிக்கை எடுத்ததோடு 13வது ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் மேலும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பு அவருக்கு இன்றும் (வியாழன், 14-11) கிடைத்தது. திருவனந்தபுரத்தில் உ.பி. அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் பவுலர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் இம்முறை ஹாட்ரிக் வாய்ப்பு இடையில் கொடுத்த சிங்கிளினால் கைகூடவில்லை.

20வது ஓவரின் முதல் பந்தில் மோசின் கானை வீழ்த்திய தீபக் சாஹர் அடுத்த பந்தில் சிங்கிள் கொடுத்தார், பிறகு மீண்டும் 3 மற்றும் 4ம் பந்துகளில் ஷானு சைனி, ஷுபம் சவ்பே ஆகியோரை வீழ்த்தினார். ஆனால் ஹாட்ரிக் கைகூடவில்லை.

சாஹர் ஆனால் இந்த முறை 46 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon