Published : 26 Sep 2019 08:07 PM
Last Updated : 26 Sep 2019 08:07 PM

நாட்டுக்காக ஆடும்போது தன் இஷ்டத்துக்கு தொடர்களை தேர்வு செய்ய முடியாது: தோனி மீது கம்பீர் பாய்ச்சல்

முன்னாள் இந்திய தொடக்க வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், இந்தியாவுக்காக ஆடும் தோனி தன் இஷ்டத்துக்கு இந்தத் தொடரில் ஆடுவேன், அந்தத் தொடரிலிருந்து விலகுகிறேன் என்று முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது:

நான் எப்போதுமே ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். ஓய்வு அறிவிப்பது என்பது தனிப்பட்ட ஒருவரது தெரிவு. அணித்தேர்வுக்குழுவினர்தான் தோனியிடம் பேசி எதிர்கால முடிவு என்ன திட்டம் என்ன என்பதை விவாதிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்காக ஆடும் ஒரு வீரர் தன் இஷ்டத்துக்கு ஒரு தொடரில் ஆடுவேன், அடுத்த தொடரில் விலகுவேன் என்று தொடர்களை தன் இஷ்டத்துக்கு தேர்வு செய்ய முடியாது என்பதே, என்றார்.

அதே வேளையில் ரிஷப் பந்த் பற்றி கூறும்போது, “ரிஷப் பந்த்தின் ஷாட் தேர்வு எப்போதும் சரியாகவே இருந்து விடாது என்பதை அணி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது ஆட்டம் சூடுபிடிக்கும் நாளில் அவர் வெற்றி வீரர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x