Published : 07 Dec 2014 11:56 AM
Last Updated : 07 Dec 2014 11:56 AM
பவுன்சர் தாக்கி மரணமடைந்த பிலிப் ஹியூஸுக்குப் புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவருடைய டெஸ்ட் எண் 408-ஐ தங்கள் சட்டைகளில் பொறித்துக்கொள்ள ஆஸ்திரேலிய அணியினர் முடிவு செய்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்டில், ஹியூஸின் நினைவுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவருடைய டெஸ்ட் எண் 408-ஐ தங்கள் சட்டைகளில் பொறித்துக்கொள்ள ஆஸ்திரேலிய அணியினர் முடிவு செய்துள்ளார். ஹியூஸ், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 408-வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஹியூஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலும் சில ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT