Published : 16 Dec 2014 01:06 PM
Last Updated : 16 Dec 2014 01:06 PM

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் ஆதிக்கம்

தமிழ்நாடு ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 321 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ளது தமிழக அணி.

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு ஜம்மு காஷ்மீர் இடையிலான போட்டியில் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2-வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி 54.2 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகத்தின் ராஹில் ஷா, ரங்கராஜன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

இதனால் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் தனது 2-வது இன்னிங்ஸைத் ஆடிய தமிழகம், ஆட்டநேர முடிவில் 49 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. முகுந்த் 110 ரன்களுடனும் பாபா அபரஜித் 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x