Published : 16 Dec 2014 12:48 PM
Last Updated : 16 Dec 2014 12:48 PM

தேசிய வாலிபால்: நாளை தொடக்கம்

சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் 8-வது எம்.ஏ.எம். முத்தையா குமாரராஜா நினைவு தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நாளை தொடங்குகிறது. 19-ம் தேதி நிறைவடைகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், புதுவை மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த 15 கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2, 3, 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இதுதவிர ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் கல்லூரிகளுக்கு இடையிலான கோ-கோ மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x