Published : 26 Nov 2014 03:08 PM
Last Updated : 26 Nov 2014 03:08 PM
பவுன்சரில் அடிபட்டு தலையில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வரும் ஆஸி, வீரர் பிலிப் ஹியூஸ் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்தார்.
பவுன்சரில் தலையின் பின்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மருத்துவர் பீட்டர் புரூக்னர் கூறுகையில், “பிலிப் ஹியூஸின் நிலையில் மாற்றமில்லை. அவர் இன்னமும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை, நிலைமையில் முன்னேற்றம் இருந்தால் உடனடியாக தெரிவிக்கப்படும்” என்றார்.
மேலும் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தால்தான் அறுவை சிகிச்சை வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், மற்றும் வீரர்கள் தங்கள் பிரார்த்தனைகளை நடத்திக் கொண்டிருக்கையில், நியுசவுத்வேல்ஸ் அணி இந்த சம்பவத்தினால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிலிப் ஹியூஸ் ஏற்கெனவே நியுசவுத்வேல்ஸ் அணிக்கு விளையாடியவர்தான்.
இந்த நிலையில் இந்த அணியின் வீரர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT