Published : 10 Nov 2014 09:36 AM
Last Updated : 10 Nov 2014 09:36 AM

ஐஎஸ்எல்: இரு ஆட்டங்களும் டிரா

கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடியபோதும் கோல் எதுவும் விழாதது ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் நடைபெற்ற கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் கோலின்றி டிராவில் முடிந்தது. நேற்று இரு நடைபெற்ற ஆட்டங்களுமே டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இன்று போட்டி எதும் கிடையாது. புனேவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனே எப்.சி. அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x