Published : 24 Nov 2014 10:24 AM
Last Updated : 24 Nov 2014 10:24 AM
ஆசிய பீச் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தாய்லாந்தின் புகெட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணி 61-28 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்திய அணி மமதா தலைமையில் ஆடியது. பிரியங்கா, ரன்தீப் கவுர், ககோலி பிஸ்வாஸ், பேயல் சவுத்ரி, பரமேஸ்வரி அம்பலவாணன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்ற வீராங்கனைகள். ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது அரையிறுதியில் 28-39 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியிடம் தோற்று வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறிய
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT