Published : 17 Nov 2014 09:35 AM
Last Updated : 17 Nov 2014 09:35 AM

ஏடிபி பைனல்ஸ்: இறுதிச்சுற்றில் ஃபெடரர்-ஜோகோவிச்

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6, 7-5, 7-6 (6) என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச்சும் போராட்டத்துக்குப் பின்னரே 6-1, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை தோற்கடித்தார்.

நடப்பு சாம்பியனான ஜோகோவிச், இந்த முறை சாம்பியனாகும் பட்சத்தில் ஏடிபி உலக டூர் பைனல்ஸில் இவான் லென்டிலுக்குப் (1985-87) பிறகு தொடர்ச்சியாக 3 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x