Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

ரியோ ஓபன்: அரையிறுதியில் நடால், ஃபெரர்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் போர்ச்சுக்கலின் ஜோ சௌசாவைத் தோற்கடித்தார்.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த நடால், அரையிறுதியில் சகநாட்ட வரான பாப்லோ அன்டுஜாரை சந்திக்கிறார். பாப்லோ தனது காலிறுதியில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டாமி ராபர்ட்டோவை தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரரும் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவும் மோது

கின்றனர். ஃபெரர் தனது காலிறுதியில் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியைத் தோற்கடித்தார். டோல்கோபோலோவ் தனது காலிறுதியில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார். 21 ஏடிபி பட்டங்களை வென்றவரான டேவிட் ஃபெரரும் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடாலும் இறுதிச்சுற்றில் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x