Published : 06 Mar 2014 10:59 AM
Last Updated : 06 Mar 2014 10:59 AM

துரோணாச்சார்யா, அர்ஜுனா விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தலைசிறந்த பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் வாழ்நாள் சாதனை படைத்தவர்கள், விளையாட்டு மேம்பாட்டுக்காக பாடுபடும் நிறுவனங்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் முறையே துரோணாச்சார்யா விருது, அர்ஜுனா விருது, தயான் சந்த் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்டீரிய கேல் புராத்சஹன் புரஸ்கார் விருது ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது மத்திய அரசு.

இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள மேற்கண்ட விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 15-ம் தேதியாகும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை “உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-A, பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-84” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x