Published : 18 Nov 2014 10:12 AM
Last Updated : 18 Nov 2014 10:12 AM

டெஸ்ட் போட்டி: 192 ரன்கள் எடுத்தார் திருஷ் காமினி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் தமிழக வீராங்கனை திருஷ் காமினி 192 ரன்கள் எடுத்தார்.

மைசூரில் , இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே 4 நாள் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளுக்கு 400 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருஷ் காமினி அதிகபட்சமாக 192 ரன்கள் எடுத்தார். பிஜி ராவுத் 130 ரன்கள் எடுத்தார். பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 2ம் நாள் இறுதியில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x