Published : 06 Mar 2014 10:46 AM
Last Updated : 06 Mar 2014 10:46 AM

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் ஜுவாலா ஜோடி தோல்வி

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி மற்றும் ஆனந்த் பவார் ஆகியோர் தோல்வி கண்டு பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

ஆனந்த் பவார் 21-18, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆன்ட்ரே குர்னிவான் டெட்ஜோனோவிடம் தோல்வி கண்டார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களான ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 21-14, 15-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜின் மா-யான்டிங் டாங் ஜோடியிடம் தோல்வி கண்டது.

மற்றொரு தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சயாலி ரானே 21-23, 20-22 என்ற நேர் செட்களில் அயர்லாந்தின் சோயி மேகீயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் அலாவத்-கிறிஸ்டி தாஸ் ஜோடியும் தகுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x