Published : 07 Oct 2014 02:40 PM
Last Updated : 07 Oct 2014 02:40 PM

இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார்.

"இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன், அவர்களுக்கு தொலைபேசி செய்து கேட்டுப் பாருங்கள், கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக இங்கிலாந்து வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் நான் கூறியிருப்பதன் உண்மை தெரியவரும்”

என்று கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதை நூல் வெளியாவதை முன்வைத்து தி டெலிகிராப் பத்திரிக்கையில் இவ்வாறு கூறினார்.

விக்கெட் கீப்பர் மேட் பிரையர் இதற்கு பதில் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x