Published : 04 Oct 2014 04:04 PM
Last Updated : 04 Oct 2014 04:04 PM

அஸ்வினுக்கு ஓய்வு: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது கை லெக் ஸ்பின்/கூக்ளி பவுலரான குல்தீப் யாதவ் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். மற்றொரு லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தோனிக்கு மாற்றாக கருதப்படும் சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி, கரன் சர்மா ஆகியோர் காரணமில்லாமல் அணியில் இடம்பெறவில்லை

முரளி விஜய் சேர்க்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அணி வருமாறு:

தோனி (கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, ராயுடு, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ் குமார், மொகமது ஷமி, மோகித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.


முதல் ஒருநாள் போட்டி அக்.8 ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. இது பகலிரவு ஆட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x