Published : 21 Nov 2013 06:48 PM
Last Updated : 21 Nov 2013 06:48 PM

ஆனந்த் மீண்டும் தோல்வி: சாம்பியனாக கார்ல்சனுக்கு வாய்ப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் 9-வது சுற்றில், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார்.

இதன் மூலம், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சன் இம்முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இன்றைய 9-வது சுற்றில், 28-வது காய்நகர்த்தலின்போது கார்ல்சன் வெற்றி கண்டார். இது, ஆனந்துக்கு எதிரான 3-வது வெற்றி ஆகும்.

இந்த வெற்றியின் மூலம் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த 3 புள்ளிகளுடன் பின்னடைவில் உள்ளார்.

இன்றைய சுற்றில் வெள்ளைக் காயுடன் களமிறங்கிய ஆனந்த், வெற்றி வாய்ப்பை தவறவிட்டதால் அது கார்ல்சனுக்கு சாதகமாகிவிட்டது. ஆனந்த் தோற்றதால், 10-வது சுற்றில் கார்ல்சன் டிரா செய்தாலே உலக சாம்பியனாகிவிடலாம் என்ற சூழல் நிலவுகிறது.

கார்ல்சன் சாம்பியன் ஆகும் வாய்ப்பைத் தடுக்க வேண்டுமெனில், அடுத்த மூன்று சுற்றுகளிலுமே ஆனந்த் வெற்றி பெற்றாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x