Published : 28 Jun 2019 07:26 PM
Last Updated : 28 Jun 2019 07:26 PM

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி: புதிய ஆரஞ்சு-நீல சீருடையில் இந்திய அணி களமிறங்கும்

இந்திய அணி நாளை மறுநாள் ஞாயிறன்று (30-6-19) இங்கிலாந்து அணியை மிக முக்கியமான போட்டியில் உலகக்கோப்பை 2019 தொடரில் சந்திக்கிறது, இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீருடை மாறுகிறது.

 

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு மற்றும் நீல நிறம் கலந்த சீருடையில் களமிறங்குகிறது.

 

இந்திய அணியின் அதிகாரபூர்வ சீருடை ஸ்பான்சர்களான நைகி நிறுவனம் புதிய சீருடையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆகாய நீல சீருடையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த ஆரஞ்சு-நீல சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இது வீரர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும், லேசாக இருக்கும் என்று நைகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x