Published : 16 Jun 2019 04:03 PM
Last Updated : 16 Jun 2019 04:03 PM

ரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம்: இந்தியா அபாரத் தொடக்கம்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதத்துடன் இந்திய அணி அபாரத் தொடக்கம் கண்டுள்ளது.

 

இந்திய அணி 13 ஓவர்களில் 80 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.  ரோஹித் சர்மா 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 34 பந்துகளில் அரைசதம் கண்டு 50 ரன்களுடனும் ராகுல் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

 

முதலில் ஹசன் அலி ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் சிக்சர் விளாசிய ரோஹித்சர்மா, லெக் ஸ்பின்னர் ஷதாப் கானின் ஒரு ஓவரில் ஒரு சிக்சரையும் ஒரு பவுண்டரியையும் விளாச 34 பந்துகளில் அரைசதம் கண்டார்.

 

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி தொடக்க ஓவர்களை சொதப்பி 3 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்தார். வஹாப் ரியாச் 2 ஓவர் 14 ரன்கள். ஷதாப் கான் 2 ஓவர் 20 ரன்.

 

மொகமது ஆமிர் 4 ஓவர் 8 ரன்களுடனும் இடது கை ஸ்பின்னர் இமாத் வாசிம் 3 ஓவர்களில் 14 ரன்களும் கொடுத்து சிக்கனம் காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x