Published : 02 Sep 2014 03:04 PM
Last Updated : 02 Sep 2014 03:04 PM

4வது ஒருநாள் போட்டி: மோகித் சர்மாவுக்குப் பதில் தவால் குல்கர்னி; இந்தியா ஃபீல்டிங்

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் மோகித் சர்மாவுக்குப் பதிலாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் இயன் பெல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மொயீன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரி பாலன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். டிரெட்வெல்லுக்குப் பதிலாக குர்னி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிட்ச் தொடக்கத்தில் சற்றே வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் பீல்டிங் தேர்வு செய்ததாக தோனி தெரிவித்துள்ளார். ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச் என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x