Last Updated : 13 Apr, 2025 09:49 AM

 

Published : 13 Apr 2025 09:49 AM
Last Updated : 13 Apr 2025 09:49 AM

உத்வேகம், நம்பிக்கை இல்லாமல் தவிக்கும் சிஎஸ்கே: தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்தது

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது.

சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி சேர்த்த குறைந்​த​பட்ச ஸ்கோ​ராக இது அமைந்​தது. மேலும் நடப்பு சீசனில் சிஸ்​கேவுக்கு இது 5-வது தொடர்ச்​சி​யான தோல்​வி​யாக​வும், சேப்​பாக்​கத்​தில் ஹாட்​ரிக் தோல்​வி​யாக​வும் அமைந்​தது. ஐபிஎல் வரலாற்​றில் சிஎஸ்கே அணி 5 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக தோல்வி கண்​டது இதுவே முதன்​முறை.

நடப்பு சீசனில் 6 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் மட்​டுமே பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. சிஎஸ்​கேவுக்கு இன்​னும் 8 ஆட்​டங்​கள் மீதம் உள்​ளன. இதில் குறைந்​த​பட்​சம் 6 முதல் 7 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு கிடைக்​கும்.

சிஎஸ்​கே​வின் தொடர்ச்​சி​யான தோல்வி​களுக்கு முன்​வைக்​கப்​படும் விமர்​சனங்​களில் முதன்​மை​யாக இருப்​பது பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரிலும், நடு​வரிசை​யிலும் களமிறங்​கும் வீரர்​கள் தங்​களது உச்​சகட்ட பார்மை இழந்​தவர்​களாக உள்​ளனர் என்​பது​தான். நடு​வரிசை​யில் ராகுல் திரி​பா​தி, ஷிவம் துபே, விஜய் சங்​கர், தீபக் ஹூடா ஆகியோர் நடப்பு சீசனில் உயர்​மட்ட செயல்திறனை வெளிப்​படுத்​த​வில்​லை.

கடந்த காலங்​களில் தொடக்க வீர​ராக களமிறங்​கும் வீரர்​கள் சிறந்த அடித்​தளத்தை அமைத்து கொடுப்​பார்​கள். அதை பின்​பற்றி 3-வது மற்​றும் 4-வது இடங்​களில் களமிறங்​கும் வீரர்​கள் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு பலம் சேர்த்​தனர். ஆனால் இந்த சீசனில் டாப் ஆர்​டரிடம் இருந்து எந்​த​வித தாக்​கத்தை ஏற்​படுத்​தும் ஆட்​ட​மும் வெளிப்​பட​வில்​லை. ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, விஜய் சங்​கர் ஆகியோர் தங்​களுக்கு கிடைத்த பொன்​னான வாய்ப்​பு​களை எட்டி உதைத்​துள்​ளனர் என்​பதே ரசிகர்​களின் ஆதங்​க​மாக உள்​ளது. திரி​பாதி 4 ஆட்​டங்களில் விளை​யாடி 46 ரன்​களை​யும், தீபக் ஹூடா 3 ஆட்​டங்​களில் 7 ரன்​களை​யும், விஜய் சங்​கர் 4 ஆட்​டங்​களில் 109 ரன்​களை​யும், ஷிவம் துபே 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 137 ரன்​களை​யும் எடுத்​துள்​ளனர்.

மேலும் இளம் வீரர்​களுக்கு வாய்ப்பு கொடுக்க ஏன் சிஎஸ்கே தயங்​கு​கிறது என்ற கேள்​வி​யும் எழுந்​துள்​ளது. ஆனால் சிஎஸ்கே அணி​யில் உள்ள இளம் வீரர்​களில் ஆந்த்ரே சித்​தார்த், வன்ஷ் பேடி, ஷேக் ரசீத் ஆகியோர் மட்​டுமே பேட்​ஸ்​மேன்​கள். ஸ்ரே​யாஷ் கோபால் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக​வும், அன்​ஷுல் கம்​போஜ் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக​வும் உள்​ளனர். குர்​ஜப்​னீத் சிங் இடது கை மிதவேகப்​பந்து வீச்​சாள​ராக அறியப்​படு​கிறார்.

கமலேஷ் நாகர்​கோட்டி வேகப்​பந்து வீச்​சாள​ராக உள்​ளார். இதில் ஆந்த்ரே சித்​தார்த் டி20 போட்​டிகளில் விளை​யாடியதே இல்​லை. வன்ஷ் பேடி ஒரே ஒரு டி20 ஆட்​டத்​தில் மட்​டுமே விளை​யாடி உள்​ளார். ஷேக் ரஷீத், குர்​ஜப்​னீத் சிங் ஆகியோ​ருக்​கும் பெரிய அளவில் அனுபவம் இல்​லை. ஸ்ரே​யாஷ் கோபால், கமலேஷ் நாகர்​கோட்டி ஆகியோர் அதிக அளவி​லான உள்​ளூர் போட்​டிகளில் விளை​யாடி உள்ள போதி​லும் பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது இல்​லை. இதன் காரண​மாகவே சிஎஸ்கே அணி இளம் வீரர்​கள் மீது பாரா​முக​மாக இருக்​கிறதோ என்ற கேள்வி​களும் எழாமல் இல்​லை.

இந்​நிலை​யில் கொல்​கத்தா அணிக்கு எதி​ரான போட்​டிக்கு பின்​னர் சிஎஸ்கே பேட்​டிங் பயிற்​சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: எங்​களிடம் சரி​யான வீரர்​கள் உள்​ளனர் என்று நான் இன்​னும் நினைக்​கிறேன். நாங்​கள் அவர்​களிடம் நம்​பிக்​கை​யை​யும் நிலைத்​தன்​மை​யை​யும் கண்​டு​பிடிக்க முயற்​சிக்க வேண்​டும். அதிலிருந்து நாங்​கள் பேட்​டிங், பந்து வீச்​சு, பீல்​டிங் ஆகிய​வற்றை வளர்க்​க​வும், கட்​டமைக்​க​வும் முடி​யும் என்று நம்​பு​கிறோம். நாங்​கள் விளை​யாடும் ஸ்டைல் குறித்து நிறைய பேசப்​படு​கிறது. ஆனால் எங்​களிடம் உள்ள வீரர்​களிடம் அவர்​களை முற்​றி​லும் மாறு​பட்ட வழி​யில் விளை​யாடு​மாறு கேட்க விரும்​ப​வில்​லை. அவர்​களு​டைய இயல்​பான ஆட்​டத்தை விளை​யாடு​கிறார்​கள். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்​னர் அவர்​கள் சிறப்​பாக விளை​யாடியதன் காரண​மாகவே தற்​போது இங்கு வந்​துள்​ளனர். நான் நிச்​சய​மாக அவர்​களை வேறு வழி​யில் விளை​யாட வைக்க முயற்சி செய்​பவன் அல்ல.

சிஎஸ்கே அணி​யில் உள்ள பல வீரர்​கள் தங்​களது கிரிக்​கெட் வாழ்க்​கை​யின் உச்​சகட்​டத்தை கடந்​து​விட்​ட​தாக விமர்​சிக்​கப்​படு​கிறது. ஆனால் இதை நான் ஏற்​றுக்​கொள்​ள​மாட்​டேன். அவர்​கள் இதற்கு அப்​பாற்​பட்​ட​வர்​கள். தங்​களது கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் அந்​திம காலத்​தில் இருந்த வீரர்​கள் சிஎஸ்​கேவுக்கு வந்து கடந்த காலங்​களில் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர். இந்த நேரத்​தில் ஷேன் வாட்​சன், அஜிங்க்ய ரஹானே ஆகியோரை நினை​வு கூர்கிறேன். அவர்​கள், சிஎஸ்​கேவுக்​காக சிறப்​பாக செயல்​பட்​டனர். எங்​களிடம் உள்ள வீரர்​கள் இன்​னும் சில நல்ல கிரிக்​கெட்டை அவர்​களுக்கு முன்​னால் வைத்​திருக்​கிறார்​கள். எங்​களுக்கு அவர்​களால் நிறைய வழங்க முடி​யும் என்றே நினைக்​கிறேன்.

இளம் வீரர்​களை பொறுத்​தவரை, அவர்​கள் சிறப்​பாகச் செயல்​படத் தயா​ராக இருக்​கும்​போது அவர்​களைத் தேர்ந்​தெடுக்க விரும்​பு​கிறோம். எங்​களிடம் சில சிறந்த வீரர்​கள் தங்​கள் வாய்ப்​புக்​காகக் காத்​திருக்​கிறார்​கள். அதில் எந்​த​வித சந்​தேக​மும் இல்​லை. அணி​கள் தொடரை வெல்ல முடி​யாத சூழ்​நிலை உரு​வாகும் போதே, இளம் வீரர்​களுக்கு வாய்ப்பு கொடுத்து முயற்​சிக்​கும் போக்கு இங்கு இருக்​கிறது. ஆனால் நாங்​கள் முடிந்​தவரை போட்​டி​யில் முன்​னேற முயற்​சிக்​கிறோம். இன்​னும் நாங்​கள் சரணடைய​வில்லை என்​பதே நிதர்​சனம்.

பிளே ஆஃப் சுற்​றுக்கு நாங்​கள் முன்​னேற வேண்​டு​மா​னால் வெற்றி பெறு​வதற்​கான வழிகளை கண்​டறிய வேண்​டும். ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் உத்​வேகம் மிக​வும் முக்​கிய​மானது. நிச்​சய​மாக அந்த உத்​வேகம் எங்​களிடம் தற்​போது இல்​லை. இந்​நிலையை மாற்​றி, நம்​பிக்​கையை பெற்று சில வெற்​றிகளை குவித்​தால் தன்​னம்​பிக்கை அதி​கரிக்​கும். இது நிகழும் பட்​சத்​தில் பிளே ஆஃப் நெருங்​கும் போது கடைசி அணி​யாக எங்​களால் நுழைய முடி​யும்.

பந்து வீச்​சு, பேட்​டிங், பீல்​டிங் என அனைத்து துறை​யிலும் எதிர்​பார்ப்​புக்கு கீழேயே நாங்​கள் இருக்​கிறோம். ஆனால் அவற்​றில் இருந்து முழு​மை​யாக வில​கி​விட​வில்​லை. முன்​னேற்​றம் அடைய வேண்​டிய பகு​தி​களை கண்​டறிந்து முடிந்​தவரை விரை​வாக நாங்​கள் மீண்​டு ​வர​வேண்​டும். அதிக அளவி​லான மாற்​றங்​களை மேற்​கொள்​வது கடந்த காலங்​களில் சிஎஸ்​கே​வின் பண்​பாக இருந்​த​தில்​லை. இதை மேற்​கொண்​டால் விஷ​யங்​கள்​ மேம்​படு​வதற்​கு முன்​பு மோச​மாகி​விடும்​. நாங்​கள்​ கொஞ்​சம்​ சுயபரிசோதனை செய்​ய வேண்​டும்​.
இவ்​வாறு மைக்​கேல்​ ஹஸ்​ஸி கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon