Published : 05 Apr 2025 09:48 AM
Last Updated : 05 Apr 2025 09:48 AM

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்!

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்​டத்​தில் 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யை​யும், 2-வது ஆட்டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. சிறந்த பார்​மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்​புடன் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யானது முதல் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 44 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த நிலை​யில், 2-வது ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யிடம் வீழ்ந்​தது. எனினும் அடுத்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி நம்​பிக்​கையை பெற்​றது.

இன்​றைய ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் அணியை முழு​மை​யாக வழிநடத்​தக்​கூடும். இதனால் அந்த அணி கூடு​தல் பலம் பெறக்​கூடும். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலின் பார்ம் கவலை அளிக்​கும் விதத்​தில் உள்​ளது. அவர், நடப்பு சீசனில் 3 ஆட்​டங்​களி​லும் முறையே 1, 29 மற்​றும் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். இன்​றைய ஆட்​டத்​தில் அவர், பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

பஞ்​சாப் அணி​யின் பேட்​டிங்​கில் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த பார்​மில் உள்​ளார். இரு ஆட்​டங்​களி​லும் அரை சதங்​கள் விளாசிய உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். மேலும் அவரது தாக்​குதல் ஆட்​டம் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பந்துவீச்சு துறைக்கு சவால் அளிக்​கக்​கூடும். ஏனெனில் இந்த சீசனில் இரு ஆட்​டங்​களில் ஸ்ரேயஸ் ஐயர் 13 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டுள்​ளார். கடந்த சீசனில் 16 ஆட்​டங்​களில் விளை​யாடி 13 சிக்​ஸர்​களை அடித்த ஸ்ரேயஸ் ஐயர் இம்​முறை அதை 2 ஆட்​டங்​களில் விளாசி மிரட்​டி​யுள்​ளார்.

மேலும் கேப்​டன் பதவி​யிலும் ஸ்ரேயஸ் ஐயர் அற்​புத​மாக செயல்​பட்டு வரு​கிறார். லக்னோ அணிக்கு எதி​ராக நிக்​கோலஸ் பூரன், ரிஷப் பந்த் ஆகியோ​ருக்கு அரு​மை​யாக பீல்​டிங் அமைத்து விரை​விலேயே வெளி​யேற்​றி​யிருந்​தார். மேலும் பந்து வீச்​சாளர்​களை பயன்​படுத்​தும் வித​மும் அனை​வரை​யும் கவர்ந்​துள்​ளது. இதனால் கேப்​ட​னாக​வும், அதிரடி பேட்​ஸ்​மே​னாக​வும் உரு​வெடுத்​துள்ள ஸ்ரேயஸ்​ ஐயர்​ மீது எதிர்​பார்​ப்​பு அதிகரித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x