Published : 29 Mar 2025 12:19 AM
Last Updated : 29 Mar 2025 12:19 AM

பேட்டிங், பந்து வீச்சுக்கு சமநிலையில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் வேண்டும்: ஷர்துல் தாக்குர் கோரிக்கை

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்​டிங், பந்துவீச்​சுக்கு சம அளவில் கைகொடுக்​கும் ஆடு​களங்​கள் அமைக்​கப்பட வேண்​டும் என லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​டர் ஷர்​துல் தாக்​குர் கூறி​யுள்​ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தனது முதல் வெற்​றியை பதிவு செய்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது.

லக்னோ அணி சார்​பில் ஷர்​துல் தாக்​குர் 4 ஓவர்​களை வீசி 34 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 191 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி நிகோலஸ் பூரன், மிட்​செல் மார்ஷ் ஆகியோரது அதிரடி​யால் 16.1 ஓவரிலேயே 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 193 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஆட்ட நாயக​னாக ஷர்​துல் தாக்​குர் தேர்​வா​னார்.

போட்டி முடிவடைந்​ததும் ஷர்​துல் தாக்​குர் கூறும்​போது,“இந்த வகை​யான ஆடு​களங்​கள் பந்​து​வீச்​சாளர்​களுக்கு சிறிது கைகொடுக்​கும் என்று நான் நினைக்​கிறேன். பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் பந்​து​வீச்​சாளர்​களுக்கு ஆட்​டம் சமநிலை​யில் இருக்​கும் வகை​யில் ஆடு​களங்​கள் தயாரிக்​கப்பட வேண்​டும் என கடந்த ஆட்​டத்​தின்​போதே கூறினேன். இம்​பாக்ட் பிளேயர் விதி இருப்​ப​தால் 240 முதல் 250 ரன்​கள் குவிக்​கப்​படு​வது பந்து வீச்​சாளர்​களுக்கு நியா​யம் சேர்ப்​ப​தாக இல்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x